sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை முதல்வர் திறந்து வைத்தார்

/

 பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை முதல்வர் திறந்து வைத்தார்

 பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை முதல்வர் திறந்து வைத்தார்

 பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை முதல்வர் திறந்து வைத்தார்


ADDED : டிச 23, 2025 05:47 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த நல்லம்பாக்கம், கண்டிகை கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளியில், 2.35 கோடி ரூபாய் செலவில், 10 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.

அதுபோல் கூடுவாஞ்சேரி, -நெல்லிக்குப்பம் சாலையி ல் உள்ள நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 1.17 கோடி ரூபாய் செலவில் 5 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. இவ்விரு பள்ளிக் கட்டடங்களையும், தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, நேற்று காலை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலெட்சுமி, நந்திவரம் - - கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் தண்டபாணி, நகராட்சி கமிஷனர் சந்தானம், பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீவித்யா, நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல, திருக்கழுக்குன்றம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1.89 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்தார்.

பள்ளியில் நடந்த விழாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றினார்.






      Dinamalar
      Follow us