sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 5 மாதமாக பழுதடைந்துள்ள மின்மாற்றி நயினார்குப்பம் கிராம மக்கள் தவிப்பு

/

 5 மாதமாக பழுதடைந்துள்ள மின்மாற்றி நயினார்குப்பம் கிராம மக்கள் தவிப்பு

 5 மாதமாக பழுதடைந்துள்ள மின்மாற்றி நயினார்குப்பம் கிராம மக்கள் தவிப்பு

 5 மாதமாக பழுதடைந்துள்ள மின்மாற்றி நயினார்குப்பம் கிராம மக்கள் தவிப்பு


ADDED : டிச 18, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:நயினார்குப்பத்தில், பழுதடைந்த மின்மாற்றி ஐந்து மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நயினார்குப்பம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த மின்மாற்றியில் இருந்து, 80 வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த 5 மாதங்களுக்கு முன், இந்த மின்மாற்றி திடீரென பழுதடைந்தது. இதனால் தற்காலிகமாக, காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து, இந்த 80 வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த மின்மாற்றியில், 100 மின் இணைப்புகள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 80 இணைப்புகள் சேர்த்துள்ளதால், காலை மற்றும் இரவு நேரத்தில், குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுகிறது.

இதனால் மின்விசிறி, ஏசி, டிவி உள்ளிட்ட சாதனங்கள் முறையாக இயங்காததால், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் மின்விசிறிகள் மெதுவாக இயங்குவதால், போதிய காற்றோட்டம் இல்லாமல் முதியோர், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களும், அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. குறைந்த மின்னழுத்த பிரச்னையால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல், கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

பழுதடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வேண்டுமென பல முறை புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, நயினார்குப்பத்தில் பழுதடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us