sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நெல் கொள்முதல் செய்யும் பணி பழையனுாரில் துவக்கம்

/

நெல் கொள்முதல் செய்யும் பணி பழையனுாரில் துவக்கம்

நெல் கொள்முதல் செய்யும் பணி பழையனுாரில் துவக்கம்

நெல் கொள்முதல் செய்யும் பணி பழையனுாரில் துவக்கம்


ADDED : மார் 17, 2024 02:26 AM

Google News

ADDED : மார் 17, 2024 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே பழையனுார் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விவசாயமே பிரதான தொழிலாகும்.

இதில், பழையனுார் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உபகரணங்கள் மற்றும் கோணிப்பைகள் எடுத்து வந்து 22 நாட்களாகியும், கொள்முதல் செய்யாமல் இருப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, கடந்த ஐந்து நாட்களுக்கு முன், நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட துவங்கியது. இதனால், நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் குவியலை கொட்டி வைத்து, பாதுகாத்து வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுவரை பதிவு செய்யப்பட்ட ஒன்பது விவசாயிகளிடமிருந்து, 40 கிலோஎடை கொண்ட, 1,221 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், மதுராந்தகம் அருகே வில்வராயநல்லுாரில் உள்ள குடோனுக்கு அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது.






      Dinamalar
      Follow us