sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொது செங்கையில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு

/

பொது செங்கையில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு

பொது செங்கையில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு

பொது செங்கையில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு


ADDED : ஏப் 08, 2025 12:23 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு பாசி தெருவைச் சேர்ந்தவர் மன்சூர் அலி, 48. செங்கல்பட்டு செட்டி தெரு மணிக்கூண்டு அருகில், துணிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை மூடி விட்டுச் சென்றார். நேற்று காலை கடையை திறக்க சென்ற போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வைத்திருந்த 50,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.

மேலும், அருகில் உள்ள சம்ஸ்கனி,50, என்பவரின் துணிக்கடையில் 3,000 ரூபாயும், தினேஷ் குமார் என்பவரின் மொபைல் போன் கடையின் பூட்டை உடைத்து 5,500 ரூபாயும் திருடப்பட்டது தெரிந்தது.

இது குறித்த தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us