/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டை உடைத்து 5 சவரன் திருட்டு
/
பூட்டை உடைத்து 5 சவரன் திருட்டு
ADDED : பிப் 08, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:பூட்டிய வீட்டை உடைத்து 5 சவரன் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி, 46. இவர், கடந்த 5ம் தேதி, தன் வீட்டை பூட்டிவிட்டு, தாம்பரத்தில் உள்ள தன் மகளின் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் மீண்டும் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 5 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து ஈஸ்வரி அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

