/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் - ஆமூர் மினி பஸ் சேவை துவக்கம்
/
திருக்கழுக்குன்றம் - ஆமூர் மினி பஸ் சேவை துவக்கம்
ADDED : அக் 03, 2025 09:58 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் - ஆமூர் இடையே, சிற்றுந்து சேவை துவக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நகரப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு, அரசு அனுமதியுடன் சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று, திருக்கழுக்குன்றம் - ஆமூர் இடையே, தனி யார் சிற்றுந்து போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.
காலை 6:00 மணிக்கு திருக்கழுக்குன்றத்தில் புறப் பட்டு கொத்திமங்கலம், புலிக்குன்றம், நெல்வாய், மேலப்பட்டு, கழனிப்பாக்கம், திருநிலை, அருங்குன்றம், மானாம்பதி, குன்னப்பட்டு வழியாக ஆமூருக்கு செல்கிறது. அங்கிருந்து திருக்கழுக்குன்றம் திரும்பும். அடுத்தடுத்து நடைகள் இயக்கப்படுகின்றன.