sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லை பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை

/

மாமல்லை பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை

மாமல்லை பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை

மாமல்லை பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை


ADDED : டிச 14, 2024 03:08 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், திருமங்கையாழ்வார் சாற்றுமுறை சேவை உற்சவம் கண்டார்.

வைணவ சமய பன்னிரு ஆழ்வார்களில், திருமங்கையாழ்வார் குறிப்பிடத்தக்கவர். கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திர நாளில் அவதரித்தார். மாமல்லபுரத்தில் வீற்றுள்ள ஸ்தலசயன பெருமாளை, அவர் 20 பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளார். ஸ்தலசயன பெருமாள் கோவிலில் வீற்றுள்ள அவர், அவதார நாளான நேற்று, சாற்றுமுறை உற்சவம் கண்டார்.

இதை முன்னிட்டு காலை திருமங்கையாழ்வார், பெருமாள், நிலமங்கை தாயார், தேவியர் ஆகியோர், சிறப்பு திருமஞ்சன வழிபாடு கண்டனர்.

மாலை, அலங்கார ஸ்தலசயன பெருமாள், தேவியர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு வழிபாடு நடந்தது.

அதைத்தொடர்ந்து, திருமங்கையாழ்வார் வீதியுலா சென்று, மீண்டும் கோவிலை அடைந்ததும், திருவாய்மொழி சாற்றுமுறை சேவை கண்டார். ஆழ்வாருக்கு, பெருமாள் பரிவட்ட மரியாதை அளித்தார்.






      Dinamalar
      Follow us