sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 திருவள்ளூர் யு - 12 கிரிக்கெட் செங்கை மாவட்டம் முதலிடம்

/

 திருவள்ளூர் யு - 12 கிரிக்கெட் செங்கை மாவட்டம் முதலிடம்

 திருவள்ளூர் யு - 12 கிரிக்கெட் செங்கை மாவட்டம் முதலிடம்

 திருவள்ளூர் யு - 12 கிரிக்கெட் செங்கை மாவட்டம் முதலிடம்


ADDED : டிச 29, 2025 07:37 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவள்ளூர் யு - 12 கிரிக்கெட் போட்டியில், செங்கல்பட்டு மாவட்ட அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலிடத்தை கைப்பற்றியது.

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், யு - 12 கிரிக்கெட் போட்டி, ஆவடியை அடுத்த பட்டாபிராமில் நேற்று நிறைவடைந்தது. போட்டியில், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் மோதின.

நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதியில், திருவள்ளூர் அணி, 40 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 155 ரன்களை அடித்தது. அடுத்து விளையாடிய ராணிபேட்டை அணி, 35 ஓவர்களில், 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.

மற்றொரு அரையிறுதியில், செங்கல்பட்டு அணி, 126 ரன்கள் வித்தியாசத்தில், காஞ்சிபுரம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நேற்று காலை நடந்த இறுதிப்போட்டியில், 'டாஸ்' வென்ற திருவள்ளூர் அணி, முதலில் பேட்டிங் செய்து, செங்கல்பட்டு அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு முன், 37.2 ஓவர்களில், 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

எளிய இலக்குடன் களமிறங்கிய செங்கல்பட்டு அணி, பொறுமையுடனும் நிதானத்துடனும் விளையாடி, 22.1 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 88 ரன்களை எட்டி, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.






      Dinamalar
      Follow us