/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடுத்தடுத்து பைக் விபத்து மூவர் இறப்பு
/
அடுத்தடுத்து பைக் விபத்து மூவர் இறப்பு
ADDED : செப் 24, 2024 03:53 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நேமம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 21. கல்லுாரி மாணவர். இவர், நண்பர் பாலாஜி, 18,இருவரும் நேற்று முன்தினம் இரவு, யமாஹா பைக்கில் சென்று கொண்டிருந்தார். நேமம் அடுத்த புதுசத்திரம் அருகே, சாலையோரம் நின்றிருந்த மினி வேன் மீது, இருசக்கர வாகனம் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சை பலனின்றி தினேஷ், பாலாஜி இருவரும் இறந்தனர்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, வேன் டிரைவர் வேலாயுதம், 47, என்பவரை கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜபேட்டையை சேர்ந்தவர் துளசிராமன், 18. இவர், திருத்தணி அரசு கல்லுாரி மாணவர். நேற்று பள்ளிப்பட்டில் இருந்து நண்பர் சந்தோஷ், 29, என்பவருடன் வந்த போது, எதிரே சதீஷ், 29, என்பவர் ஓட்டி வந்த ஸ்பிளண்டர் பைக் மீது மோதியதில், துளசிராமன் சம்பவ இடத்திலேயே பலியானர்.
சந்தோஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் பலத்த காயத்துடன், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.