sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு அருகில் டூ-வீலர்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி

/

செங்கல்பட்டு அருகில் டூ-வீலர்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி

செங்கல்பட்டு அருகில் டூ-வீலர்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி

செங்கல்பட்டு அருகில் டூ-வீலர்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி


ADDED : ஜூன் 16, 2025 11:54 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அருகே டூ- வீலர்கள் நேருக்கு நேர் மோதி, மூன்று பேர் பலியாயினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், காவிதண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா, 21.நேற்று முன்தினம் இரவு தன் நண்பர் ஒரக்காட்டு பேட்டை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், 16. என்பவருடன் 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டில் இருந்து காவிதண்டலம் நோக்கி சென்றார்.

செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் பழத்தோட்டம் - ஒரக்காட்டுபேட்டை பாலாறு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு 'பஜாஜ் பல்சர்' பைக் மோதியது.

இதில் பாலமுருகன் மற்றும் எதிரே பைக்கில் வந்த ஆத்துார் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த விஷ்வா, 19 இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சூர்யா மற்றும் விஷ்வாவுடன் பைக்கில் வந்த சிவசக்தி, 25, ரியாஷ், 25, ரஞ்சித், 24 ஆகிய மூவரை சக வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், விபத்தில் இறந்த பாலமுருகன், விஷ்வா இருவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், விஷ்வா மற்றும் மூவர் ஒரக்காட்டுபேட்டையில் நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு ஒரே பைக்கில் வந்துள்ளனர். ஒரக்காட்டுபேட்டை மேம்பாலத்தில் வந்த போது அங்கு மின் விளக்கு இல்லாததால் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

செங்கல்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

****






      Dinamalar
      Follow us