ADDED : செப் 30, 2024 06:44 AM
சென்னை : சென்னையில் மொத்தம், 13.74 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, 2024 -- 25ம் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டது.
சொத்து வரி, இரண்டு அரையாண்டு வீதம் வசூலிக்கப்படும். முதல் அரையாண்டுக்குள் வரி செலுத்தாமல், அதை, இரண்டாம் அரையாண்டில் செலுத்தினால், ஒவ்வொரு மாதமும் ஒருசதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
முதல் அரையாண்டில், செப்., 28ம் தேதி வரை, 835 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. அதேபோல், சென்னை குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.
முதல் அரையாண்டில், 28ம் தேதி வரை, 375 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி உள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு, முதல் அரையாண்டு வரியை, இன்றுக்குள் செலுத்த வேண்டும். மீறினால், 1 சதவீதம், தனி வட்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

