sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கோவளத்தில் பஸ் நிலையம் அமைக்க சுற்றுலா பயணியர் கோரிக்கை

/

கோவளத்தில் பஸ் நிலையம் அமைக்க சுற்றுலா பயணியர் கோரிக்கை

கோவளத்தில் பஸ் நிலையம் அமைக்க சுற்றுலா பயணியர் கோரிக்கை

கோவளத்தில் பஸ் நிலையம் அமைக்க சுற்றுலா பயணியர் கோரிக்கை


ADDED : ஆக 18, 2025 02:14 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:கோவளத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை- -- மாமல்லபுரம் இடையே, கோவளம் ஊராட்சி உள்ளது. இங்கு கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா ஆகியவை உள்ளன.

இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும், சுற்றுலா பயணியரும் தினமும் கோவளத்திற்கு வந்து செல்கின்றனர்.

சென்னை, கிளாம்பாக்கம், தாம்பரம், அடையாறு, தி.நகர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் கோவளத்திற்கு இயக்கப் படுகின்றன.

ஆனால், கோவளத்தில் பேருந்து நிலையம் இல்லாததால், மாநகர பேருந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஏற்கனவே அங்கு வணிக பகுதி, தர்கா, மாமல்லபுரம் செல்லும் சாலை, கடற்கரை சாலை இருப்பதால், அதிக மக்கள் நடமாட்டமும், வாகன நெரிசலும் உள்ளது.

எனவே, கோவளத்தில் பேருந்து நிலையம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us