sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் நெரிசல் சி.பெ. கோவிலில் போலீசார் அசட்டை

/

எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் நெரிசல் சி.பெ. கோவிலில் போலீசார் அசட்டை

எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் நெரிசல் சி.பெ. கோவிலில் போலீசார் அசட்டை

எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் நெரிசல் சி.பெ. கோவிலில் போலீசார் அசட்டை


UPDATED : ஜன 25, 2025 07:36 AM

ADDED : ஜன 25, 2025 12:26 AM

Google News

UPDATED : ஜன 25, 2025 07:36 AM ADDED : ஜன 25, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் -ஸ்ரீபெரும்புதுார் சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை சுற்றியுள்ள திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு ஆட்கள் ஏற்றி செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த சாலையில் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது.

இந்த ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் இருபுறமும் எதிர் திசையில் தனியார் தொழிற்சாலை பேருந்துகள், அரசு பேருந்துகள் வழியை மறித்து முதலில் செல்ல வேண்டும் என, போக்குவரத்து விதிகளை மீறி நிறுத்துவதால் ஸ்ரீ பெரும்புதுார் திசையில் வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டு இருபுறமும் தினமும் 1 கி.மீ., துாரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நேரங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களும் நெரிசலில் சிக்குகின்றன.

இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:

ரயில் கேட் பகுதியில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் தாங்கள் முதலில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர் திசையிலும் சென்று நிற்பதால் அந்தப் பக்கம் இருந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக ஜி.எஸ்.டி.,சாலையில் திருத்தேரி வரை 1 கி.மீ., துாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய போக்குவரத்து போலீசார் ஜி.எஸ்.டி., சாலையில் மேம்பாலத்தின் கீழே நின்று வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதிலேயே குறியாக உள்ளனர்.

இதை விடுத்து ரயில்வே கேட்டை கடந்து திருக்கச்சூர் பகுதியில் நெடுஞ்சாலை குறுகலாகும் இடத்தில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிங்கபெருமாள் கோவில் போக்குவரத்து நெரிசலுக்கு எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் முக்கிய காரணமாக உள்ளது. இதை கண்டு கொள்ளாத போக்குவரத்து போலீசார் குழுக்களாக இணைந்து ஜி.எஸ்.டி., சாலையில் அபராதம் விதிப்பதிலேயே மும்முரமாக உள்ளனர்.

திருக்கச்சூர் ஆபத்துக் கால்வாய் பகுதியில் போலீசார் எதிர் திசை வாகனங்களை தடுத்து நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். தற்போது தினமும் வாகன ஓட்டிகளிடையே வாக்கு வாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற வருகின்றன.

-வி.மணிமாறன், டிரைவர் ஒரகடம்.






      Dinamalar
      Follow us