/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நண்பனை கொன்று மரத்தில் தொங்கவிட்ட இருவர் கைது
/
நண்பனை கொன்று மரத்தில் தொங்கவிட்ட இருவர் கைது
ADDED : ஆக 07, 2025 01:38 AM

செங்குன்றம்:மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், நண்பனைக் கொன்று மரத்தில் தொங்கவிட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம், விளாங்காடுபாக்கம், மல்லிமா நகர் கால்பந்து மைதானம் அருகே உள்ள மரத்தில், கடந்த 4ம் தேதி காலை, வாலிபர் ஒருவர் மரத்தில் பிணமாக தொங்கினார்.
செங்குன்றம் போலீசார் அந்த உடலை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் இறந்தவர், பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், 19, என தெரிந்தது.
ரா ஜேஷ், தன் நண்பர்களான மல்லிமா நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 22, புழலைச் சேர்ந்த இளம்பரிதி, 20, ஆகியோருடன் சேர்ந்து, மது அருந்திய போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போ து, நண்பர்கள் இருவரும் பீர் பாட்டிலால் தலையில் அடித்து, ராஜேஷை கொன்றுள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் காட்ட, மரத்தில் தொங்கவிட்டதும் தெரிந்தது.
இதையடுத்து சந்தோஷ்குமார், இளம்பரிதி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் நேற்று அடைத்தனர்.