sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரயிலில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய இருவர் சிக்கினர்

/

ரயிலில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய இருவர் சிக்கினர்

ரயிலில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய இருவர் சிக்கினர்

ரயிலில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய இருவர் சிக்கினர்


ADDED : ஜூலை 09, 2025 02:28 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,:புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணியர் விரைவு ரயிலில், மதுபாட்டில்கள் கடத்திய இருவரை, மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

பாண்டிச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணியர் விரைவு ரயிலில் மதுபானம் கடத்தப்படுவதாக, மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்படி, மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களபிரியா தலைமையிலான போலீசார், மாலை 6:00 மணியளவில், மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு வந்த, பாண்டிச்சேரி ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த விழுப்புரம் மாவட்டம், மலையரசன் குப்பத்தைச் சேர்ந்த வள்ளி, 47, சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்,50, ஆகியோரை சோதனை செய்த போது, மதுபாட்டில்கள் இருந்தன.

இதையடுத்து, அவர்களை கைது செய்து, 750 மி.லி., கொண்ட, 290 ரூபாய் மதிப்புள்ள, 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us