ADDED : பிப் 20, 2026 05:44 AM
மறைமலைநகர், மறைமலை நகரில் பைக் திருட்டு வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 22.மறைமலை நகரில் தங்கி கேளம்பாக்கம் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு தனது 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு உறங்கச் சென்றார். நேற்று காலை மீண்டும் பார்த்த போது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், மணலி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரி,20. அவரது நண்பரான, 17 வயது சிறுவனும் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

