sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது

/

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது


ADDED : மே 02, 2025 02:10 AM

Google News

ADDED : மே 02, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:மதுராந்தகம் அடுத்த பெரிய வெண்மணி கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 42.

இவர் நேற்று முன்தினம், மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு, சித்தாமூர் நோக்கி வந்துள்ளார்.

அப்போது, மேல்மருவத்துார் போலீசார் இவரை மடக்கி சோதித்த போது, அது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என தெரிந்தது.

இது குறித்து மேலும் விசாரித்ததில் மதுராந்தகம், அச்சிறுபாக்கம், ராமாபுரம், மேல்மருவத்துார் சுற்றுவட்டார பகுதிகளில், இவர் இருசக்கர வாகனங்கள் திருடியது தெரிந்தது.

திருடிய வாகனங்களை, சித்தாமூர் ஒன்றியம், கொளத்துார் அடுத்த பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருமலை, 26, என்ற, பைக் மெக்கானிக்கிடம் விற்றது தெரிந்தது. மெக்கானிக் திருமலையை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

பின், வழக்கு பதிவு செய்து ராஜேஷ், திருமலையை, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us