sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கஞ்சா வழக்கில் இருவர் கைது

/

கஞ்சா வழக்கில் இருவர் கைது

கஞ்சா வழக்கில் இருவர் கைது

கஞ்சா வழக்கில் இருவர் கைது


ADDED : அக் 06, 2025 11:36 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு செங்கல்பட்டில், கஞ்சா வழக்கில் ஆந்திர மாநில வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில், செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலை அருகில், மூங்கில் அம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக நடந்து வந்த இரண்டு நபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இருவரையும் மடக்கி பிடித்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், இருவரும் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாங்கிமதுரு, 24, அவரது நண்பரான தளபதி விஜயகுமார், 19, என தெரிந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us