ADDED : மார் 14, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை:குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்தார். அவர் யார், எந்த ஊர் போன்ற விபரங்கள் தெரியவில்லை. கால் சட்டை அணிந்திருந்தார். அதன் பாக்கெட்டில் மொபைல் இருந்தது.
அதேபோல், அங்கிருந்து சற்று துாரத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் குறித்த விபரங்களும் தெரியவில்லை.
போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

