/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதாள சாக்கடை திட்ட பணி எச்சரிக்கை பலகை அவசியம்
/
பாதாள சாக்கடை திட்ட பணி எச்சரிக்கை பலகை அவசியம்
ADDED : ஜூலை 09, 2025 02:06 AM

செங்கல்பட்டு:பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறும் பகுதிகளில், அவசியம் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுந்தபுத்தேரி அழகேசன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலையின் மையப்பகுதிகளில், குழாயை இணைக்கும் தொட்டிகள் அமைக்க, பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. அதன் பின், பள்ளங்களில் தொட்டிகள் அமைக்கப்பட்ட பின், சாலையை முழுமையாக சீரமைக்காததால், ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன.
இவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்லும் போது, பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படுகிறது.
அந்த வகையில் நேற்று, செங்கல்பட்டு குண்டூர் பகுதியில் பள்ளம் தோண்டிய பகுதியை முறையாக சீரமைக்காததால், தனியார் பள்ளி வேன் பள்ளத்தில் சிக்கியது.
இதில், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனவே, இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில், அவசியம் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.