/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
/
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜன 12, 2025 08:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள கால்வாயில், அடையாளம் தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் நபரின் சடலம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் அச்சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின், வழக்கு பதிவு செய்து, இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.