sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

/

செங்கை ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

செங்கை ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

செங்கை ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 29, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், அம்ருத் பாரத் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க, பயணியரிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் சென்று வருகின்றன.

செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் சென்று வருகின்றன.

இந்த ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வருகின்றனர்.

ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம், ரயில் பயணியர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள, அம்ருத் பாரத் திட்டத்தில், 22.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டது.

இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக, 2023 ம் ஆண்டு, ஜூலை 12ம் தேதி துவக்கி வைத்தார்.

இப்பணிகளை, ஒப்பந்ததாரர்கள் விரைவாக முடித்துதர வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்பின், ரயில் நிலைய வளாகத்தில், முழுமையாக பணிகள் மேற்கொள்ள வசதியாக பயணியருக்கு மாற்று பாதை அமைக்கப்பட்டது.

பணிகள் துவங்கி, ரயில் நிலையத்தில் உள்ள எட்டு நடைமேடைகளில், கூரை, தரையில் சிமென்ட் கற்கள் பதித்தல், 1வது நடை மேடை, எட்டாவது நடை பகுதியில், தலா ஒரு மின் துாக்கி அமைக்கும் பணி முடிந்துள்ளது. நுழைவாயில் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணி மந்தமாக நடைபெறுவதால், ரயில் நிலையம் செல்லும் பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us