/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
/
சூணாம்பேடு பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
சூணாம்பேடு பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
சூணாம்பேடு பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூன் 16, 2025 01:45 AM

சூணாம்பேடு,:சூணாம்பேடு ஊராட்சியின் மையப்பகுதியில் பஜார் பகுதி உள்ளது. இங்கு காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அஞ்சலகம், பேருந்து நிறுத்தம், பள்ளி, வங்கி போன்றவை செயல்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன.
ஆகையால் தினமும் நுாற்றுக்கணக்கானோர் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் மொத்த அகலம் 3.5 மீட்டர், உள்ளதால், கார், வேன், பேருந்து, லாரி ஆகியவை சென்றுவர கடினமாக உள்ளது.
முன்னே செல்லும் வாகனங்களை முந்த முயற்சிக்கும் போது, விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும் பஜார் வீதிக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை, சாலையில் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை அளவீடு செய்து, சூணாம்பேடு பஜார் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.