sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கால்நடை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வலியுறுத்தல்

/

கால்நடை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வலியுறுத்தல்

கால்நடை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வலியுறுத்தல்

கால்நடை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வலியுறுத்தல்


ADDED : அக் 09, 2025 03:17 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுப்பாக்கம், ஊராட்சி நிர்வாகம் முறையாக சுத்தம் செய்யாததால், கடம்பூர் பகுதி கால்நடை குடிநீர் தொட்டியில் பாசி படர்ந்துள்ளது. தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கடம்பூரில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2019 -- 20ல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.

ஊராட்சி நிர்வாகம் சார்பில், கால்நடை தொட்டிக்கு குழாய் இணைப்பு வழங்கி தண்ணீர் நிரப்பப்பட்டது.

மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகள் கால்நடை தொட்டியில் தேக்கி வைக்கப்படும் குடிநீரை பருகி தாகம் தீர்த்து வந்தன.

இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் நீண்டகாலமாக சுத்தம் செய்யாததால், இந்த தொட்டியில் பாசி படர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே, கால்நடைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us