/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு சந்தையில் காய்கறி விலை குறைவு
/
செங்கல்பட்டு சந்தையில் காய்கறி விலை குறைவு
ADDED : ஏப் 21, 2025 01:49 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி மார்க்கெட், மகேந்திரா சிட்டி அருகில், திருச்சி - ---- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது.
திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில கிராமங்களில் இருந்தும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர்.
புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், மொத்த விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன.
கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்பட்டு, இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த காய்கறிகளை புறநகர் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று, தங்களின் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது கத்தரிக்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளதால், விலை வெகுவாக குறைந்து உள்ளது.
மொத்த விலையில் பெரும்பாலான காய்கறிகள் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.
இருப்பினும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் காய்கறிகளின் விலையில் மாற்றமில்லை.

