/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொடர் முகூர்த்தம் எதிரொலி காய்கறிகள் விலை உயர்வு
/
தொடர் முகூர்த்தம் எதிரொலி காய்கறிகள் விலை உயர்வு
ADDED : பிப் 03, 2025 11:52 PM

மறைமலை நகர், செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி மார்க்கெட், மகேந்திரா சிட்டி அருகில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர். புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், மொத்த விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன.
அத்துடன், கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்தும் கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த காய்கறிகளை புறநகர் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில்லறை விற்பனை வியாபாரிகள் வாங்கிச் சென்று, தங்களின் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.
தை மாத துவக்கத்திலேயே தொடர் முகூர்த்த நாட்கள் வருவதால், செங்கல்பட்டு காய்கறி சந்தையில், காய்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தில் உள்ளது.