ADDED : டிச 04, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில், வடகிழக்கு பருவமழைக் கால கால்நடை சிறப்பு மருத்துவ முகாம், நேற்று நடந்தது. முகாமில், மருத்துவ குழுவினர்களால் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின், 10 கால்நடைகளுக்கு, செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டது.
முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் பாலகிருஷ்ணன், மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.