sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விளாங்காடு ஊராட்சியில் சாலை வசதியின்றி அவதி

/

விளாங்காடு ஊராட்சியில் சாலை வசதியின்றி அவதி

விளாங்காடு ஊராட்சியில் சாலை வசதியின்றி அவதி

விளாங்காடு ஊராட்சியில் சாலை வசதியின்றி அவதி


ADDED : அக் 31, 2025 11:06 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:விளாங்காடு ஊராட்சியில், புதிதாக சாலை அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தாமூர் அடுத்த விளாங்காடு ஊராட்சியில், 850க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்காடு காலனியில் உள்ள நேரு தெரு மற்றும் அம்பேத்கர் தெருக்களில், 15 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

முறையான பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் ஜல்லிகள் பெயர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக சாலை பழுதடைந்து உள்ளது. இதனால், மழைக்காலத்தில் தெருக்கள் சகதியாக மாறுவதால், நடந்து செல்ல முடியாமல், அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும், சகதியில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.

எனவே, விளாங்காடு ஊராட்சியில் புதிதாக சாலை அமைக்க, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us