sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன், காவலாளி அவசியம்

/

பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன், காவலாளி அவசியம்

பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன், காவலாளி அவசியம்

பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன், காவலாளி அவசியம்


ADDED : செப் 05, 2025 01:58 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூரில், பள்ளி விடுதிக்கு தனி வார்டன், காவலாளி நியமித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மாணவர்கள் தங்கி படிக்க, அப்பள்ளி அருகே, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், அரசு விடுதி உள்ளது.

இதில் இரண்டு சமையலர்கள், ஒரு துாய்மை பணியாளர் பணி செய்து வருகின்றனர்.

ஆனால், விடுதிக்கு வார்டன் மற்றும் காவலாளி இல்லாத நிலையில், மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி படிப்பதில்லை. பள்ளியிலிருந்து மதிய உணவுக்கு மட்டும், 50 மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த விடுதிக்கு தனி வார்டன் இல்லாத நிலையில், பாலுார் விடுதி வார்டன், இதை கூடுதலாக கவனிக்கிறார். இங்கு காவலாளியும் இல்லாததால், மாணவர்கள் அச்சப்படுகின்றனர். விடுதி அறைகள், சமையல் அறையின் தரைப்பகுதிகளும் சேதமடைந்துள்ளன.

எனவே, விடுதியில் மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக, தனியாக வார்டன், காவலாளி நியமித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us