/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு புதிதாக கிணறு அமைக்கப்படுமா?
/
பெரும்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு புதிதாக கிணறு அமைக்கப்படுமா?
பெரும்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு புதிதாக கிணறு அமைக்கப்படுமா?
பெரும்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு புதிதாக கிணறு அமைக்கப்படுமா?
ADDED : அக் 29, 2025 10:47 PM

மதுராந்தகம்:பெரும்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், புதிதாக குடிநீர் கிணறு அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் காலனி பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், பெரும்பாக்கம் ஏரிக்கரை அருகே குடிநீர் கிணறு தோண்டப்பட்டு, அதற்கு சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டது.
பின், மின்மோட்டார் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய் மூலமாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு பெய்த மழையின் காரணமாக ஏரியில் நீர் நிரம்பியதால், நீர் ஊற்றின் காரணமாக, சுற்றுச்சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்து மூடியது.
இதனால், பெரும்பாக்கம் காலனி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பெரும்பாக்கம் ஏரிக்குள் உள்ள மற்றொரு குடிநீர் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், ஏரி நிரம்பி, இந்த குடிநீர் கிணற்றில் ஏரி நீரும் கலப்பதால், அசுத்தமாகி வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரால், பெரும்பாக்கம் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பெரும்பாக்கத்தில் புதிதாக குடிநீர் கிணறு அமைத்து, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

