sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெண்கள் பள்ளி எதிரே 'சிசிடிவி' அமைக்கப்படுமா?

/

பெண்கள் பள்ளி எதிரே 'சிசிடிவி' அமைக்கப்படுமா?

பெண்கள் பள்ளி எதிரே 'சிசிடிவி' அமைக்கப்படுமா?

பெண்கள் பள்ளி எதிரே 'சிசிடிவி' அமைக்கப்படுமா?


ADDED : ஜூலை 17, 2025 01:06 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவாயில் எதிரே, கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டுமென, மாணவியரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் மார்வார் பெண்கள் மேல்நிலை பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் நுழைவாயில் எதிரே, மாணவியரின் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களாக, இந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்து 'ஒயர்'கள் அறுந்து, காட்சிப்பொருளாக இருந்தது.

இதையடுத்து, அந்த கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் புதிதாக அமைக்கப்படவில்லை.

இதனால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே, 'ரோமியோ'க்கள் சிலர், காலை மற்றும் மாலை வேளைகளில், விலை உயர்ந்த, அதிக சத்தம் எழுப்பக்கூடிய 'பைக்'குகளில் சாகசம் செய்து வருகின்றனர்.

எனவே, பள்ளி மாணவியரின் பாதுகாப்பு கருதி, அச்சிறுபாக்கம் போலீசார் இங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என, மாணவியரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us