/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
/
செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
ADDED : ஜூலை 02, 2025 09:50 PM
செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால், இப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் குடிநீரின்றி கடும் அவதிப்படுகின்றனர்.
செய்யூர் பஜார் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், அரசு பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பஜார் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
மேலும் தேவராஜபுரம், சால்ட் காலனி, பாளையர்மடம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர்களுக்கு செல்ல செய்யூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்துகின்றனர்.
பஜார் பகுதியில் இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்படுகின்றன.
இதனால் தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் செய்யூர் பஜார் பகுதியில், குடிநீர் வசதி இல்லாததால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கடும் சிரமப்படுகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், பஜாரின் மையப்பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.