/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
/
உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
ADDED : நவ 24, 2025 03:41 AM

மறைமலை நகர்: செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில், உணவுக்கு வழியின்றி சாலையோரங்களில் தஞ்சமடைந்துள்ள ஆதரவற்றோரை மாவட்ட நிர்வாகம் மீட்டு, அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட் டு புறநகர் பகுதிகளில் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகள், நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர், இந்த பகுதிகளில் புதிதாக வீடு கட்டி குடியேறி வருகின்றனர்.
அதே நேரத்தில் சமீப காலமாக இந்த பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், கோவில்கள் மற்றும் சாலையோரங்களில், ஆதரவற்ற முதியோர் கேட்பாறின்றி வாழ்ந்து வருகின்றனர்.கிடைத்த இடங்களில் துாங்கி, குப்பையில் வீசப்படும் உணவுக் கழிவுகளை உண்டு வெயில், மழையில் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்றவர்களை மாவட்ட நிர்வாகம் மீட்டு, அவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறி யதாவது:
வெளி மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரும் பேருந்துகள் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து ரயில்கள் மூலமாக வரும் ஆதரவற்ற முதியோர் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு இட ங்களில், கேட்பாரற்று உணவின்றி தவித்து வருகின்றனர்.
பலர் தங்களது பெற்றோரை திருப்போரூர் முருகன் கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்து வந்து, ஏமாற்றி விட்டுவிட்டுச் செல்கின்றனர்.
இதுபோன்று விடப்படும் ஆதரவற்றோர் பலர், நடக்க முடியாத நிலையில், உடலில் காயங்களுடன் வசித்து வருகின்றனர்.
இவர்களை கவனிக்க யாருமில்லாத நிலையில், சாலையோரத்தில் அனாதையாக இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. உணவுக்காக தவிக்கும் இவர்கள், குப்பையில் கிடக்கும் உணவை உண்டு காலத்தை கழித்து வருகின்றனர்.
இதுபோல ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு, உரிய சிகிச்சை அளித்து, பராமரிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் கவனித்து, இதற்கு உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

