sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லையில் பயனற்ற குடிநீர் கிணறு நீரின் தரம் சோதித்து பயன்படுத்தப்படுமா?

/

மாமல்லையில் பயனற்ற குடிநீர் கிணறு நீரின் தரம் சோதித்து பயன்படுத்தப்படுமா?

மாமல்லையில் பயனற்ற குடிநீர் கிணறு நீரின் தரம் சோதித்து பயன்படுத்தப்படுமா?

மாமல்லையில் பயனற்ற குடிநீர் கிணறு நீரின் தரம் சோதித்து பயன்படுத்தப்படுமா?


ADDED : ஜன 31, 2025 12:35 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரம் வெண்புருஷம் பகுதியில், குடிநீர் தேவைக்காக, 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு பயனற்று வீணாகிறது. கிணற்றுநீரை பரிசோதித்து, தரம் இருந்தால் பயன்பாட்டிற்கு கொண்டுவர, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மாமல்லபுரம் பேரூராட்சியின், 15வது வார்டு பகுதியாக, வெண்புருஷம் உள்ளது. இப்பகுதியின் குடிநீர் தேவைக்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தன்னார்வ நிறுவனம், பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக, குடிநீர் கிணறு அமைத்தது. அப்போது கிணற்றுநீர் உவர்ப்புநீராக இருந்ததால், அந்நீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்காமல், பேரூராட்சி நிர்வாகம் தவிர்த்ததாக கூறப்பட்டது. இதனால் நீண்டகாலமாக பயனின்றி உள்ளது.

வெண்புருஷம் பகுதியில் உள்ள பிற கிணற்று குடிநீர் தரமாக உள்ளது. இக்கிணறும் நீண்டகாலம் முன் தோண்டப்பட்டதால், நீரின் உவர்ப்புத்தன்மை மாற்றமடைந்திருக்க வாய்ப்புள்ளது. பேரூராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், கூடுதல் குடிநீர் தேவைக்காகவும், பயனற்ற கிணற்றின் நீரின் தரத்தை, பேரூராட்சி நிர்வாகம் பரிசோதித்து, தரமிருந்தால் விநியோக பயன்பாட்டிற்கு கொண்டு, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us