sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

எல்லையம்மன் கோவிலில் சமுதாய நலக்கூடம் அமையுமா?

/

எல்லையம்மன் கோவிலில் சமுதாய நலக்கூடம் அமையுமா?

எல்லையம்மன் கோவிலில் சமுதாய நலக்கூடம் அமையுமா?

எல்லையம்மன் கோவிலில் சமுதாய நலக்கூடம் அமையுமா?


ADDED : ஜூலை 23, 2025 10:02 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே, எல்லையம்மன் கோவில் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யூர் அருகே முதலியார்குப்பம், நயினார்குப்பம், ஓதியூர் உள்ளிட்ட பகுதிகளில், சமுதாய நலக்கூடம் வசதி இல்லை.

இதனால், இப்பகுதிகளில் வசிப்போர் தங்களது குடும்பங்களின் சுப நிகழ்ச்சிகளான நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த மண்டபம் தேடி கடப்பாக்கம், செய்யூர் போன்ற பகுதிகளுக்கு அலைய வேண்டியுள்ளது. அத்துடன், தனியார் மண்டபத்தில் வாடகையாக அதிக பணம் கேட்பதால், ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேருராட்சி பகுதியில், எல்லையம்மன் கோவில் பகுதி உள்ளது. இது, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரதான பேருந்து நிறுத்தங்களில் ஒன்றாக உள்ளதால், அதிகமானோர் கூடும் இடமாகவும் உள்ளது.

போக்குவரத்து வசதி உள்ள இடமாக எல்லையம்மன் கோவில் பகுதி உள்ளதால், இங்கு சமுதாய நலக்கூடம் அமைத்தால், அனைத்து தரப்பினருக்கும் வசதியாக இருக்கும். அத்துடன், பேரூராட்சிக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.

எனவே, எல்லையம்மன் கோவில் பகுதியில் சமூதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us