/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படூர் புறவழி சாலையில் மேம்பாலம் அமையுமா?
/
படூர் புறவழி சாலையில் மேம்பாலம் அமையுமா?
ADDED : மார் 11, 2024 06:01 AM
திருப்போரூர் : பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ராஜிவ் காந்தி சாலை, சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை ஆறு வழிப்பாதையாக உள்ளது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை, நான்கு வழிப்பாதையாக உள்ளது.
படூர், கேளம்பாக்கம் பகுதியிலும், திருப்போரூர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், இங்கு புறவழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது.
படூர் -- தையூர் இடையே ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் -- ஆலத்துார் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
படூர் -- தையூர் இடையிலான புறவழிச்சாலை 4.67 கிமீ துாரத்திற்கு அமைகிறது. திருப்போரூர் -- ஆலத்துார் இடையிலான புறவழிச் சாலை 7.45 கி.மீ துாரத்திற்கு அமைக்கப்படுகிறது. இரண்டு புறவழிச் சாலைகளுக்கும் மொத்தம், 465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், படூர் - ஓ.எம்.ஆர்., சாலையிலிருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலை குறுக்கே தான் படூர் புறவழிச்சாலை செல்கிறது.
இதையடுத்து, அப்பகுதியினர் மற்றும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும், இந்த வழியாக பயணித்து, ஓ.எம்.ஆர்., சாலையை அடைகின்றனர்.
ஆனால், இந்த பிரதான சாலை குறுக்கே புறவழிச்சாலை செல்வதால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சாலையை கடந்து செல்கின்றனர்.

