/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிதாக மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பரா?
/
புதிதாக மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பரா?
புதிதாக மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பரா?
புதிதாக மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பரா?
ADDED : மார் 02, 2024 10:32 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், களத்துார் ஊராட்சிக்குட்பட்ட அம்மா கொல்லமேடு மற்றும் காட்டு பிள்ளையார் கோவில் கிராமத்தில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, குழாய் வாயிலாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில், துாண்களில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், தொட்டி உறுதித்தன்மை இன்றி உள்ளது.
எனவே, பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, மீண்டும் அதே பகுதியில் புதிதாக அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

