sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பைக்கிலிருந்து விழுந்த பெண் இறந்ததால் வாலிபர் கைது

/

பைக்கிலிருந்து விழுந்த பெண் இறந்ததால் வாலிபர் கைது

பைக்கிலிருந்து விழுந்த பெண் இறந்ததால் வாலிபர் கைது

பைக்கிலிருந்து விழுந்த பெண் இறந்ததால் வாலிபர் கைது


ADDED : ஜூன் 20, 2025 09:08 PM

Google News

ADDED : ஜூன் 20, 2025 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், கடந்த 10ம் தேதி, செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்யகீதன், 26, என்பவரது பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது, கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே இளம்பெண், அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். சத்யகீதன் நடந்ததை அவர்களிடம் கூற, ஆத்திரமடைந்த உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர் தலைமறைவானார்.

பின், மேல் சிகிச்சைக்காக இளம்பெண்ணை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று இளம்பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து உறவினர்கள், இளம்பெண் இறப்பிற்கு சத்யகீதன் தான் பொறுப்பு. அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருப்போரூர் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து திருப்போரூர் போலீசார், பைக்கை அஜாக்கிரதையாக இயக்கி விபத்து ஏற்படுத்தியதால் இளம்பெண் இறந்துள்ளார் என, சத்யகீதனை கைது செய்து, அவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us