/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதியவர் கொலை வழக்கில் வாலிபர் கைது
/
முதியவர் கொலை வழக்கில் வாலிபர் கைது
ADDED : ஏப் 19, 2025 08:14 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகில் சாலை ஓரம் கடந்த 17ம் தேதி இரவு இறந்த நிலையில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இறந்த நபர் குறித்து நடத்திய விசாரணை நடத்தினர்.
இறந்த நபர் செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்த பழனி. இவர் 17ம் தேதி இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகில் மது போதையில் அவதுாறாக பேசிக்கொண்டிருந்தார். அப் போது அங்கு இருந்த இளைஞர் பழனியை தாக்கியபோது உயிரிழந்தது தெரிந்தது.
இந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பழனியை தாக்கிய செங்கல்பட்டு என்.ஜி.ஓ., நகர் பகுதியை சேர்ந்த ராஜ், 26. என்பவரை நேற்று மாலை கைது செய்தனர்.