/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்
/
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்
ADDED : ஏப் 23, 2025 08:43 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதியில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காலை 11:00 மணியளவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து, அந்த வாலிபர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது.
வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, அவர் பெரம்பூர், செம்பியம் பகுதி, டீட்ஸ் கார்டன் ஏழாவது தெருவைச் சேர்ந்த பாலாஜி, 20, என தெரிந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை ஆஜர்படுத்தி, பின் சிறையில் அடைத்தனர்.