/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலிபர்கள் மோதல்: தடுத்த எஸ்.எஸ்.ஐ., மீது தாக்கு
/
வாலிபர்கள் மோதல்: தடுத்த எஸ்.எஸ்.ஐ., மீது தாக்கு
வாலிபர்கள் மோதல்: தடுத்த எஸ்.எஸ்.ஐ., மீது தாக்கு
வாலிபர்கள் மோதல்: தடுத்த எஸ்.எஸ்.ஐ., மீது தாக்கு
ADDED : நவ 19, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி: ஓ ட்டேரி, ஸ்ட்ரான்ஸ் சாலை பகுதியில், மது போதையில் இரு வாலிபர்கள் மோதிக்கொள்வதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.
ரோந்து பணியில் இருந்த, ஓட்டேரி சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதர், அங்கு சென்று இருவரையும் சமரசம் செய்ய முயன்றார்.
அப்போது, ஆத்திரமடைந்த மது போதை நபர்கள், ஸ்ரீத ரி ன் வலது தோள்பட்டையில் கையால் தாக்கினர். போலீஸ் தாக்கப்பட்டதை அறிந்து, அங்கு வந்த போலீசார், இரு வாலிபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அதில், ஓட்டேரியைச் சேர்ந் த சஞ்சய், 20, மற்றும் கைலாஷ், 19, என தெரிந்தது. போலீசார், இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

