/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
/
மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : மே 14, 2025 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், 25. மறைமலை நகர் அடுத்த நின்னை காட்டூர் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி பெயின்டர் வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறினார்.
அப்போது தவறி விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று காலை உயிரிழந்தார். மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.