/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கனரக வாகனத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
/
கனரக வாகனத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
ADDED : மார் 11, 2024 04:25 AM

ஆவடி, : ஆவடி அடுத்த பட்டாபிராம், நேரு நகரைச் சேர்ந்தவர் கணேஷ், 37; வெல்டர்.
இவர் பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றபோது, பட்டாபிராம், தண்டரை மேம்பாலத்தில் திருத்தணியில் இருந்து திருமுல்லைவாயிலுக்கு சிமென்ட் ஏற்றிச் சென்ற கனரக லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த கணேஷ் மீது, லாரி ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தகவலறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், கணேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால், மேம் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்த போலீசார், லாரி டிரைவரான திருத்தணி, பெரியார் நகரைச் சேர்ந்த பார்த்தசாரதி, 31, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

