/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரனுாரில் விபத்தில் வாலிபர் பலி
/
பரனுாரில் விபத்தில் வாலிபர் பலி
UPDATED : ஏப் 01, 2025 11:37 PM
ADDED : ஏப் 01, 2025 07:30 PM
மறைமலைநகர்:விழுப்புரம் மாவட்டம், மானந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 28.
நேற்று அதிகாலை சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி, தன் 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்றார். அதிகாலை 5:00 மணியளவில், ஜி.எஸ்.டி., சாலையில் பரனுார் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலுள்ள மீடியன் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட அண்ணாமலை, அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், அண்ணாமலையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

