sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீர் குழாயில் கழிவுநீர்: ராயப்பேட்டையில் அவலம்

/

குடிநீர் குழாயில் கழிவுநீர்: ராயப்பேட்டையில் அவலம்

குடிநீர் குழாயில் கழிவுநீர்: ராயப்பேட்டையில் அவலம்

குடிநீர் குழாயில் கழிவுநீர்: ராயப்பேட்டையில் அவலம்


ADDED : ஜூலை 13, 2011 10:59 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ராயப்பேட்டை பகுதியில், குடிநீரில் சாக்கடை கலப்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, தலையாரி தெரு, பெருமாள் முதலி தெரு, ராமசாமி கார்டன் தெரு ஆகிய பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதி களில் சாக்கடை நீர் வழிந்தோடு வதும், குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் கலந்து கருப்பு நிறத்தில் வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.சாக்கடை கலந்து வரும் குடிநீரை குடிக்க முடியாமல் குழந்தைகள், முதியோர் பெரும் அவதிப்படுகின்றனர். குழாய்களில் வரும் குடிநீரின் அருகில் சென்றாலே, நாற்றம் எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.



இதுகுறித்து, ஜான்ஜானிகான் சாலையில் உள்ள குடிநீர் வாரிய அலுவலர்களிடம் புகார் தெரிவித்தால், பெயரளவுக்கு தற்காலிகமாக சுத்தம் செய்துவிட்டு, 'சில நாட்களில் சரி செய்கிறோம்' என, உத்தரவாதம் அளித்து, புகார் கொடுத்தவர்களிடம் கையெழுத்து பெற்றுச் செல்கின்றனர்.குடிநீர் குழாய்க்கும், கழிவுநீருக்கும் எங்கே தொடர்பு உள்ளது, அதை சரிசெய்வது எப்படி என்பது பற்றி, அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், அவர்கள் கையெழுத்து பெற்றுச் சென்ற மறுநாளே மீண்டும் கழிவுநீர் கலந்து குழாய் களில் தண்ணீர் வருகிறது. இதனால், இப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நீண்டகாலமாக இருந்து வரும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணக் கோரி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்தவும், முதல் வரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் அனுப்பவும், இப்பகுதி வாசிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us