/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
--மாமூல் கேட்டு கடை உடைப்பு அண்ணா நகரில் 4 பேர் கைது
/
--மாமூல் கேட்டு கடை உடைப்பு அண்ணா நகரில் 4 பேர் கைது
--மாமூல் கேட்டு கடை உடைப்பு அண்ணா நகரில் 4 பேர் கைது
--மாமூல் கேட்டு கடை உடைப்பு அண்ணா நகரில் 4 பேர் கைது
ADDED : ஜன 10, 2025 12:21 AM

அண்ணா நகர், அண்ணா நகர், குமரன் நகரைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 35; நியூ ஆவடி சாலையில் டிபன் கடை வைத்துள்ளார்.
இவரது கடைக்கு, டிச., 21ம் தேதி இரவு, ஆட்டோவில் வந்த ஆறு பேர் கும்பல், வெண்ணிலாவை அவதுாறாக பேசி, மாமூல் கேட்டு மிரட்டியது.
வெண்ணிலா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அக்கும்பல், கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி, கல்லா பெட்டியில் இருந்த, 1,500 ரூபாயை பறித்து தப்பியது.
இதுகுறித்த வெண்ணிலா புகாரை விசாரித்த அண்ணா நகர் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட அயனாவரத்தைச் சேர்ந்த கோகுல்குமார், 25, மற்றும் அருணாச்சலம், 20, ஆகிய இருவரையும், டிச., 22ம் தேதி கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த, அண்ணா நகரைச் சேர்ந்த ரவுடி ஜோசப், 24, சூர்யா, 21, திருவள்ளூர் டேனியல், 21, மற்றும் பட்டாபிராம் கிருபா, 21, ஆகிய நால்வரை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர்.
இதில், பழைய குற்றவாளியான ஜோசப் மீது, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 18 வழக்குகளும், கிருபா மீது ஒன்பது வழக்குகளும் உள்ளன. நால்வரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.