/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செஸ் போட்டியில் சாய் விஸ்வேஷ் அசத்தல்
/
செஸ் போட்டியில் சாய் விஸ்வேஷ் அசத்தல்
ADDED : ஆக 09, 2024 12:37 AM

சென்னை,
தமிழ்நாடு ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் போட்டி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த மாதம் துவங்கியது. இப்போட்டி, இந்திய வீரர்களை சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக நடத்தப்படுகிறது.
அதற்காக, வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் சர்வதேச மாஸ்டர்கள் தொடர்ந்து பங்கேற்று, தமிழக மற்றும் இந்திய இளம் வீரர்களுடன் மோதி வருகின்றனர்.
இதில், 23வது ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, சென்னை அபு சரோவர் வளாகத்தில் நடக்கிறது.
இப்போட்டியின் நான்காவது சுற்று முடிவில், இந்தியாவின் சாய் விஸ்வேஷ், சர்வதேச மாஸ்டரான துர்க்மெனிஸ்தானின் ஒராஸ்லியை வென்று அசத்தினார்.
போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.