/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
100 சவரன் கொள்ளை விவகாரம் நாடகமாடி சிக்கிய உரிமையாளர்
/
100 சவரன் கொள்ளை விவகாரம் நாடகமாடி சிக்கிய உரிமையாளர்
100 சவரன் கொள்ளை விவகாரம் நாடகமாடி சிக்கிய உரிமையாளர்
100 சவரன் கொள்ளை விவகாரம் நாடகமாடி சிக்கிய உரிமையாளர்
ADDED : ஆக 01, 2024 12:48 AM

திருவேற்காடு, சென்னை, திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், இ.ஜி.பி., நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 45. இவர், சவுதி அரேபியாவில் கட்டுமான நிறுவன பொது மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி கோகிலா, 40. தம்பதிக்கு பிளஸ் 1 படிக்கும் மகள் உள்ளார். தம்பதி ஒன்றரை மாதங்களுக்கு முன் மேற்கண்ட முகவரியில் வாடகைக்கு வந்துள்ளனர்.
தற்போது, விடுப்பில் சென்னை வந்துள்ள ஜனார்த்தனன், கடந்த 28ம் தேதி குடும்பத்துடன் அண்ணா நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு 'ஷாப்பிங்' சென்றுள்ளார்.
இரவு வீடு திரும்பும்போது, வீட்டில் பீரோவில் இருந்த 103 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. வழக்கு பதிவு செய்த
திருவேற்காடு போலீசார், சந்தேக நபரை பிடித்து விசாரித்தனர்.
இந்த நிலையில், 'நகை கொள்ளை போனது குறித்த புகார் மீது நடவடிக்கை தேவையில்லை' என, ஜனார்த்தனன் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், ஜனார்த்தனனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்:
'ஆன்லைன்' சூதாட்ட பழக்கத்தால், எனக்கு அதிக கடன் ஏற்பட்டது. அதை சரிசெய்ய, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கோகிலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன்.
சம்பவத்தன்று மனைவிக்கு தெரியாமல், வடபழனியைச் சேர்ந்த உறவினர் தியாகராஜன், 38, என்பவரை சந்தித்து, வீட்டு சாவியை அவரிடம் கொடுத்தேன். வீட்டில் பாதுகாப்பில்லை; ஆகவே அங்கு இருக்கும் நகைகளை எடுத்து பத்திரமாக அவரது வீட்டில் வைக்குமாறு கூறினேன். பின் குடும்பத்தினருடன் 'ஷாப்பிங்' போனேன். இரவு வந்து நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடினேன். போலீசில் புகார் கொடுத்தேன்.
அடுத்த நாள் உறவினர் எடுத்து வைத்திருந்த நகைகளில், 43 சவரன் நகைகளை விற்று, செலவு செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
போலீசார், தியாகராஜனிடம் இருந்து 60 சவரன் நகைகள் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.