ADDED : மார் 10, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம்,
பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் பிரதான சாலை, பொல்லினேனி எதிரே உள்ள விளையாட்டு மைதான புதரில் நின்றிருந்த இருவரை, பள்ளிக்கரணை மதுவிலக்கு போலீசார் பிடித்தனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகுதி, 42, கெம்மிலி சத்திபாபு, 32, என்பது தெரியவந்தது. சோதனையில் 110 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது.
விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பலருக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.