sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

14ஐ மணந்த 16 வயது சிறுவன் சமூக வலைதளத்தால் விபரீதம்

/

14ஐ மணந்த 16 வயது சிறுவன் சமூக வலைதளத்தால் விபரீதம்

14ஐ மணந்த 16 வயது சிறுவன் சமூக வலைதளத்தால் விபரீதம்

14ஐ மணந்த 16 வயது சிறுவன் சமூக வலைதளத்தால் விபரீதம்


ADDED : மார் 02, 2025 12:38 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டம், ஆலங்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், தாத்தா உடன் வசித்து வந்தார்.

இவர், 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளம் வாயிலாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி, 2024ம் ஆண்டு, பிப்., 14ம் தேதி காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளார். அங்கு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, தன் தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவல் சிறுமிக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மார்ச் மாதம் தாத்தாவை பார்க்க சிறுமி, திருப்பூர் சென்று உள்ளார்.

அப்போது, சிறுமிக்கு திருமணமானது தெரியவந்தது. இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் அளித்த புகாரின்படி, திருப்பூர் மாவட்ட மகளிர் காவல் நிலைய போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பூரில் இது சம்பந்தமான விசாரணை முடிந்து, இவ்வழக்கை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். காஞ்சிபுரத்தில் திருமணம் நடந்ததால், இவ்வழக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us